|
|
|||
|
||||
Overviewபதினெட்டாம் பெருக்கு ந. பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை தொகுதி. இருபது ஆண்டுகளுக்கு முன் வெளியானது. முதல்பதிப்பு குறைந்த பிரதிகளே அச்சிடப்பட்ட புத்தகம், எவ்வளவோ இலக்கிய வாசகர்கள் கண்ணில் பட்டதே இல்லை. இருபது ஆண்டுகள் கழித்து இரண்டாவது பதிப்பு வெளிவருகிறது. தமிழ் சிறுகதைத் துறையில் விரல்விட்டு எண்ணக் கூடிய சிறந்த கதைக்காரர்களில் ந. பிச்சமூர்த்தி ஒருவர் என்பதை 'பதினெட்டாம் பெருக்கு'தொகுப்பு நிரூபிக்கும். நானாவித அனுபவங்களை கலைநயத்துடன் வெளியிடும் ஒரு முதிர்ந்த கலைஞன் உணர்வை, பார்வையை, வெளியீட்டு சக்தியை இவைகளில் காணலாம். இக்கரையில் படிக்கட்டுகளே தெரியவில்லை. அக்கரையில் நாணல்களின் வளைந்த நுனிகளெல்லாம் ஆற்று நீரில் விழுந்து விழுந்து எழுந்துகொண்டிருந்தன. கரை புரண்டு போகும் பெருக்கில் நொங்கும் நுரையும், சீமைப் பிலா இலைகளும், காய்ந்த மலர்மாலைகளும் மிதந்து சென்றன. காவிரியின் பதினெட்டாம்பெருக்கு. தமிழ் மக்கள் கவியுள்ளம் படைத்தவர்கள் என்பதில் சந்தேகமில்லை. இல்லாவிட்டால் காவிரியை சூல் கொண்ட பெண்ணென்று யாருக்குச் சொல்லத் தெரியும்? காவிரிப் பெருக்கு மோட்டிலும் முடைசலிலும், படுகையிலும் பண்ணையிலும் பாய்ந்து மண்ணைக் கனகமாக்கி மகிழ்ச்சி விளைவிக்கவில்லையா? ஆற்றுப்பெருக் கின் அசைவு சூல்கொண்ட பெண்ணைப் போல் இல்லையா? தெருக் கோடிவீட்டு மாடியிலிருந்து வடக்கே பார்த்தால் இந்த ஆனந்த மயமான காட்சி தென்படும். கிழக்கே பார்த்தால் ஆற்றங்கரைக்கு வந்துசேரும் ரஸ்தா, பாம்பின் நாக்கைப் போல நீண்டு தென்புறத்தில் மறைவது தெரியும். Full Product DetailsAuthor: N PichamoorthiPublisher: Nilan Publishers Imprint: Nilan Publishers Dimensions: Width: 15.20cm , Height: 0.90cm , Length: 22.90cm Weight: 0.218kg ISBN: 9788168511224ISBN 10: 8168511220 Pages: 158 Publication Date: 01 April 2026 Audience: General/trade , General Format: Paperback Publisher's Status: Active Availability: Available To Order We have confirmation that this item is in stock with the supplier. It will be ordered in for you and dispatched immediately. Language: Tamil Table of ContentsReviewsAuthor InformationTab Content 6Author Website:Countries AvailableAll regions |
||||